கேரள கஞ்சா கடத்திய நால்வர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) –  யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் 4 பேர் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 38 கிலோ கிராம் கேரள கஞ்சா இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.