ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த 7 வயது சிறுவன ஒருவன் அங்குள்ள மதினா மசூதிக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அருகில் ஒரு 5 வயது சிறுமி யும் விளையாடி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம மனிதன் சிறுமியிடம் சாக்லெட் தருவதாக ஆசை வார்த்தை கூறினான். அதி நம்பிய சிறுமியை மர்ம நபர் மறைவான இடத்திற்கு அழைத்து சென்றான்.
இதை கவனித்து கொண்டு இருந்த 7 வயது சிறுவன் உடனடியாக ஓடிச்சென்று சிறுமியின் பெற்றோரிடம் கூறினான்.
உடனடியாக பெற்றோர்கள் அக்கம் பக்கதில் உளளவர்களை அழைத்து கொண்டு சிறுவன் காட்டிய இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு புதர் மறைவில் சிறுமி அழுது கொண்டு இருந்தார். கூட்டம் வருவதை பார்த்ததும் மர்ம மனிதன் அங்கு இருந்து ஓட முயற்சித்தான் ஆனால் கூட்டத்தில் உள்ளவர்கள அவனை சுற்றி வளைத்து பிடித்த தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஓப்படைத்தனர்