(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, 19 மோட்டார் சைக்கிள்கள், மூன்று முச்சக்கரவண்டிகள் மற்றும் லொறி உட்பட 23 வாகனங்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.