தற்போதைய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக சிறுவர்களை கூடிய அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் பெற்றோரின் செயற்பாடுகள் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் குழந்தைகளும் கடுமையான அழுத்தங்கள் காரணமாக மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு எட்டாம் தரம் அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பொன்றில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.