கடந்த 24 மணித்தியாலயத்தில் 53 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி 265 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்போது 48 வாகனங்களை கைப்பற்றி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.