மாவட்டங்களுக்கு இடையில் பயணிக்க தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகியன தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது