LPL போட்டி தொடர்பிலான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா பிரிமியர் லீக் போட்டியினை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர் ரவின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த போட்டிகள் அனைத்தையும் சூரியவேவ கிரிக்கெட் மைதானதில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு வீரர்களும், ஏனைய குழுவிருனம் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் எனவும் தனிமைப்படுத்தல் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் வீரர்கள் தொடருக்காக அமைக்கப்படும் பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.