மேலும் 544 கொரோனா தொற்றாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 544 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 13,628 ஆக அதிகரித்துள்ளது.