பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படும் பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று(17) முதல் முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 6 பேரூந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இதேவேளை பேரூந்து போக்குவரத்தில் அதிககட்டணங்கள் அறவிடப்படுகின்றமை தொடர்பில்
முறைப்பாடுகளை ஆராய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.