2021 வரவு –செலவுத்திட்டம் : இரண்டாவது நாளாகவும் விவாதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் 75ஆவது வரவு செலவுத் திட்டமான 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தினால் 2021 ஆம் ஆண்டுக்கான வருமானமாக 1,961 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனமாக 3,525 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் 1,564 பில்லியன் ரூபா துண்டு விழும் தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 9.30 முதல் பிற்பகல் 5.30 வரை பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.