மேலும் 274 பேருக்கு கொவிட் உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,775 ஆக அதிகத்துள்ளது.