புறக்கோட்டையில் சில வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு – புறக்கோட்டை வழமைக்கு கொண்டுவரப்பட்டாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்படி புறக்கோட்டை மெனிங் காய்கறி சந்தை , 4ம் மற்றும் 5ம் குறுக்கு தெருக்களில் வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.