மேலும் 558 பேர் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 558 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,560 ஆக அதிகரித்துள்ளது.