கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் நாளைக் காலை 9 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 3 மணி வரை 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 01, 02,10 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களிலே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் கொழும்பு 03, 04, 08  மற்றும் கொழும்பு 09 ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுமெனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது