மத்திய அதிவேக வீதி தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகலை முதல் தம்புள்ளை வரையிலான வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்திகள் அனைத்தும் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹேர முதல் கலகெதர வரையிலான மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.