திரையங்குகள் இன்று முதல் மீண்டும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கமைய நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இன்று மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து சினிமா திரையரங்குகளும் கிருமி நீக்க தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளதுடன், சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையார்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.