(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பேலியகொட கொவிட் 19 கொத்தணியுடன் தொடர்பில் 680 பேரும், சிறைச்சாலை கொவிட் 19 கொத்தணியுடன் தொடர்பில் 03 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்தோரில் 12 பேரும் (ஜோர்தான் -06, அமெரிக்கா 02, யுக்ரேன் – 01) உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில், கொவிட் தொற்றினால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி மொத்த கொவிட் மரண எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது
