(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு இதற்கு தேவையான ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களில், வைத்தியசாலைகளில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் மருத்துபீட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.