எச்.ஐ.வீ தொற்றுள்ளது என்ற வதந்தியால் அநீதிக்கு உள்ளான குளியாபிட்டியவில் வசிக்கும் சிறுவனை கொழும்பு ஆனந்த கல்லூரி அல்லது கண்டி கிங்ஸ்வுட் கல்லூரிக்கு சேர்த்துக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிறுவனின் தாயின் விருப்பத்திற்கு ஏற்ப குறித்த கல்லூரிகளில் ஒன்றில் சேர்த்து கொள்ளுமாறு கல்வி அமைச்சிற்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதனோடு சிறுவனின் செலவுகளை பூர்த்தி செய்ய ஒரு திட்டத்தை மேற்கொள்ளுமாறும் பிரதமர் மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.