‘Batticaloa Campus’ தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கோப் குழு தீர்மானம்…

(FASTNEWS|COLOMBO) – ‘Batticaloa Campus’ எனும் பெயரில் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு எனப்படும் கோப் குழு தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி கோப் குழு கூடவுள்ளதாக, குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.