தலங்கம, தலவத்துகொட பகுதியில் பாதையிலிருந்த இரு வாகனங்களுடன் மோதி தியவன்னா ஆற்றினுல் விழுந்திருந்து விபத்துக்குள்ளாகிய BMW i8 ரக அதிசொகுசு வாகனத்தின் உரிமையாளரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று(20) கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் தலங்கம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, தலங்கம பொலிஸாரால் நேற்று(19) கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.