Facebook கடவுச்சொல் தொடர்பில் அவதானம்…

e-mail மற்றும் பேஸ்புக் ஊடாக வருகின்ற தகவல் ஒன்றின் மூலம் அவற்றின் கடவுச் சொற்களை திருடுகின்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த இந்த தகவலை திறப்பதன் மூலம் மீண்டும் கடவு இலக்கம் கோரப்படுகின்ற நிலையில், அதனை பதிவிடுகின்றபோது வேறொரு தரப்பினரால் அந்த கடவுச் சொற்கள் திருடப்படுவதாக கணினி அவசர சேவை சபை குறிப்பிட்டுள்ளது.

எனவே முடிந்தளவிற்கு அத்தகைய தகவல்களை திறப்பதை தவிர்க்குமாறும் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் கணினி அவசர சேவை சபை கோரிக்கை விடுத்துள்ளது.