கொழும்பு – காலி வீதியின் கல்கிஸை, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்று, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவின் உறவினொருவருக்குச் சொந்தமானதென கூறப்படுகிறது.