சர்வதேச கால்பந்து அமைப்பு (ஃபிஃபா) தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதாக செப் பிளேட்டர் செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சர்வதேச கால்பந்து சம்மேளன (ஃபிஃபா) தலைவராக தேர்வு செய்யப்பட்ட செப் பிளாட்டர் (வயது 79) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
79 வயதான பிளேட்டர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் மாநாட்டில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஃபிஃபா சிறப்பு மாநாட்டை கூட்டி மீண்டும் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சுமார் ரூ.70 கோடி ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் ஃபிஃபாவின் துணைத் தலைவர்கள் உட்பட 7 பேரை கைது செய்ய அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அவர்கள் சுவிட்சர்லாந்து போலீஸாரால் கடந்த 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து பிளேட்டருக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. அவர் மீண்டும் தலைவராகக் கூடாது என்றும், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அப்போது அந்த கருத்தை ஏற்காமல் துணிந்து தேர்தலில் இறங்கிய பிளேட்டர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹூசைனை விட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்றார்.
இந்நிலையில் பதவியேற்று ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் பிளேட்டர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அவசரமாக கூட்டப்பட்ட செய்தியாளர்களின் சந்திப்பின் போது, “உலக கால்பந்து அமைப்பில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களை காணமுடியவில்லை. ஃபிஃபாவுக்கு வலுவான மறுகட்டமைப்பு தேவை’ என்றார்.
பிளேட்டர் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 17 ஆண்டுகள் ஃபிஃபாவின் தலைவர் பதவியை வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.