மத்திய வங்காள விரிகுடாவில் நிலைத்து வரும் ‘கஜ’ (GAJA) என்ற சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 900 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.5N, கிழக்கு நெடுங்கோடு 87.4E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.
இது 15ம் திகதியாகும் போது, பாரிய சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சூறாவளியினால் பாரிய பாதிப்புக்கள் எதுவும் இல்லை என்றும் குறித்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.