GMOA இனது தலைவர் அனுருத்தவின் வழக்கை விசாரிக்க நாள் நியமிப்பு..

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நாள் நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஆகஸ்ட் 2ம் திகதி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(22) தீர்மானித்துள்ளது.

பேராசிரியர்கள் சரத் விஜேசூரிய, காமினி வியன்கொட ஆகியோர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்ட வேளையே வழக்கு விசாரணைக்கான தினமும் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)