அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி நெருக்கடி தொடர்பில் பெற்றுக் கொடுக்கவுள்ள இறுதி தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்வதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரியே குறித்த இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையில் மருத்துவ பீடங்களின் தலைவர்கள் , பெற்றோர் சங்கம் உள்ளிட்ட தரப்பினரை அழைக்குமாறும் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
(rizmira)