IS தீவிரவாதிகளை மொத்தமாக அழிப்பதற்காக ‘பென்டகம்’ புதிய திட்டம்…

அமெரிக்க பாதுகாப்பு மையமான ‘பென்டகன்’, ஐஎஸ் தீவிரவாதிகளை மொத்தமாக அழிப்பதற்கான புதிய திட்ட வரைபை, அந்நாட்டு ஜனாதிபதி வாசஸ்தலமான வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்கு, பென்டகன் புதிய பொறிமுறைகளை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில், பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், அந்நாடுகளின் அரசிற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க, புதுமையான திட்டங்களை நிறைவேற்ற உத்தரவிட்ட்டுள்ளதோடு, அமெரிக்க பாதுகாப்புக்காக 54 பில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அதற்கமைய பென்டகன், புதுவித தாக்குதல் பொறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளதோடு, நவீன ஆயுத பயன்பாடுகளுடனான பாரிய இராணுவத் தாக்குதல் ஒன்றை நடத்தும் சாத்தியப்பாடுகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.