இஸ்லாம் அரசின் பயங்கரவாத அமைப்புடன், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த இலங்கையர்கள் 32 பேர் உள்ளனர் என்று சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் விஜயதாஸ ராபஜக்ஷ நாடாளுமன்றத்தில் இன்று(18) தெரிவித்தார்.
இதேவேளை, மத போதனைகளை செய்வதாக கூறுகின்ற சிலர், சர்வதேச பாடசாலைகளில் மாணவர்களின் மூளையை சலவைச் செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அவை தொடர்பிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் மதத் தீவிரவாதத்துக்கு இனிமேல் நாட்டில் இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.