O/L பரீட்சைக்காக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான முக்கிய அறிவித்தல்..

2018ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படாத அடையாள அட்டைகள் இம்மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், இதுவரை தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத சாதாரண தர பரீட்சாத்திகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் பரீட்சாத்திகளைக் கேட்டுள்ளது.