SLFP ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி’யே…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவே களமிறக்கப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசிலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் 16 பேரும் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி சுயலாபம் கருதியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டிருந்தனர்.

மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் பிரபல்யமான ஒருவர் என்ற போதிலும், அவரை நாட்டின் ஜனாதிபதியாக மீளவும் தெரிவு செய்ய முடியாது. மலர் மொட்டு கட்சி மீளவும் குடும்ப அரசியலை நோக்கி நகர்கின்றது. 2015ஆம் ஆண்டில் ஆட்சியை நிறுவிய அரசாங்கம் குடும்ப அரசியலை எதிர்க்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.