SLFP பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்பு…

(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொலிசாருக்கு பணிப்புரை விடுத்தார்.

நேற்றைய தினம்(13) வன்முறையில் ஈடுபட்டிருந்த நபர்களை ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்திற்கு சென்று பிணையில் விடுவித்தமை தொடர்பிலேயே பிரதமர் மேற்கண்டவாறு நடவடிக்கை எடுக்க பணித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.