SLPL மீண்டும் களத்திற்கு வரும் சாத்தியம்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் இலங்கை பிரிமியர் லீக் (SLPL) இருபதுக்கு20 போட்டியினை மீண்டும் ஆரம்பிக்க திட்டம் தீட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(05) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; இது குறித்து இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் எதிர்வரும் வருடத்தில் இடம்பெறலாம் என யூகிக்கப்படுவதோடு; 2012ம் ஆண்டு SLPL இறுதியாக இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.