இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண போட்டியின் தோல்வியை தெரிவு குழு சார்பாக தான் பொறுப்பேற்று கொள்வதாக இலங்கை கிரிக்கட் தெரிவு குழுவின் தலைவர் அரவிந்தடி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியில் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பாக நேற்றைய தினம் (05) கொழும்பில் இடம்பெற்ற விஷேட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கூறுகையில் மாலிங்க இவ்வாறு அணிக்கு ஒத்துழைப்பு வழங்காமை ஏன் என்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு நாடகமாகவும் இருக்கலாம், அவர் எவ்வாறான போட்டிகளில் இதன்பிறகு பங்கேற்பார் என்றும் நீங்களே காணலாம் என, அசட்டையாக பதிலளித்திருந்தார்.
குறித்த வீடியோ;
[youtube url=”https://www.youtube.com/watch?v=XQt0CRSmX7U” width=”560″ height=”315″]