UNP ஆதரவாளர் வீட்டில் யானை வெடி…

ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவரின் விட்டில் நேற்று(11) மாலை யானை வெடியினை இட்டு அச்சமேற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி சாலியவெவ காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேல் புளியங்குளம , அலுத்கம – பத்தி இந்துவர கிராமத்தை சேர்ந்த காஞ்சனா ஷலனி என்ற பெண் குறித்த முறைப்பாடை மேற்கொண்டுள்ளார்.

தான் உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டில் இருந்த போது ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர் ஒருவர் தனது வீட்டினுள் இவ்வாறு யானை வெடியினை வீசிச் சென்றதாக குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் , சூரியவெவ காவ்றதுறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

#rishma