மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் நேற்றிரவு(05) ஏற்பட்ட தீச் சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட இரசாயனப் பொருட்களின் கசிவே இந்த தீக்கான காரணம் என மொரட்டுவ தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த தீயினால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்பட வில்லையெனவும் ஆய்வுகூடத்தின் பெரும்பகுதி அழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.