(FASTNEWS | COLOMBO)- பாணந்துறை சரிக்கமுல்ல திக்கல பகுதியில் இருதரப்பினருக்கு இடையே நிலவிய வாக்குவாதத்தினைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞரின் வீடு ஒன்று சிங்களவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தினால் குறித்த பிரதேசத்தில் நேற்று(20) இரவு பதற்ற நிலை ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் இருதரப்புகளுக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதல்களால் பலர் காயமடைந்துள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு உடனடியாக பிரதமரின் பணிப்பில் விசேட அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விபத்து மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.