WannaCry மின்னஞ்சல் குறித்து இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு எச்சரிக்கை..

அனாமதேய ஆபத்து மிகுந்த மின்னஞ்சல்கள் தொடர்பாக இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

WannaCry எனப்படும் கணினி பொறியை சீர்குலைக்கும் நிகழ்ச்சித் திட்டங்களில் இருந்து பாதுகாக்கும் முகமாகவே குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்:

– Update Windows Patches – விண்டோஸ் பெச்சஸ்களை மேம்படுத்திக் கொள்ளவும்.

– Backup all documents to an external drive – கணினியில் உள்ள அனைத்து தரவுகளையும் பிறிதொரு பிரத்யேக ஹாட்டிரைவில் பதிந்து சேமித்து கொள்ளவும்.

– அனாமதேய சந்தேகத்திற்கிடமான உள்ளீடுகளுடன் வரும் மின்னஞ்சல்கள் திறக்க வேண்டாம் எனவும், அவதானமாக அவற்றை அகற்றிவிட வேண்டும் எனவும் இணைய பயனாளர்களிடம் மேலும் கோரப்பட்டுள்ளது.

(rizmira)