கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நகர மண்டபம் வரை பயணிகள் படகு சேவை…

கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நகர மண்டபம் வரை பயணிகள் படகு சேவை…

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலை வரை பேரவாவி ஊடாக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கும், நகர மண்டபத்திற்கும் செல்லும் மக்களின் நலன்கருதி குறித்த இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.