எதிர்வரும் ஒவ்வொரு வாரமும் எரிபொருள் விலையில் அதிகரிப்பு…

எதிர்வரும் ஒவ்வொரு வாரமும் எரிபொருள் விலையில் அதிகரிப்பு…

எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கும் போது விலை அதிகரிப்புக்கு சாத்தியப்பாடுகள் அதிகளவு உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கல்கமுவ, எஹெட்டுவெவ பண்டாரகம பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.