இன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று (03) நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.