(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட கல்லறை முதன்முறையாக ஊடகங்களில் வௌிப்படுத்தப்பட்டுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸின் கல்லறையில் இலத்தீன் மொழியில் அவரது பெயர் ‘பிரான்சிஸ்கஸ்’ என எழுதப்பட்டுள்ளது.
நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் நேற்று (26) இத்தாலியின் தலைநகரான ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் உலகத் தலைவர்கள் உள்ளிட்ட 2 இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.