ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று(07) இடம்பெறவுள்ளது.
சமகால அரசியல் நிலவரம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.