கண்டி – கலஹா வைத்தியசாலையில் நேற்று(28) இடம்பெற்ற சம்பவம் குறித்து முறையான விசாரணை ஒன்றினை நடாத்துமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கலஹா வைத்தியசாலையில் குழந்தை ஒன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்த சம்பவம் தொடர்பில் நேற்று(28) வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதோடு, வைத்தியசாலை சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.