கொதிகலன் வெடித்ததில் இந்தியப் பிரஜை பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – கொட்டதெனியாவில் இரும்பு உருக்கும் பட்டறையின் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மூவரும் இந்தியப் பிரஜைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.