ஜனாதிபதியுடன் இன்று(20) விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக மாலபே சைட்டம் நிறுவனத்தின் பெற்றோர் பேரவை தெரிவித்துள்ளது.
குறித்த பேரவையின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், இன்று பிற்பகல் 4 மணியளவில் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.
சைட்டம் நிறுவனம் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடியான நிலைமை தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கும் நோக்கிலேயே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.