தம்புள்ள கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தம்புள்ள கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளை நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தம்புள்ள நகர சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.