தீவிரவாத ஒழிப்பு புதிய சட்டங்களை அமுல்படுத்த ஜனாதிபதி பணிப்பு [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீவிரவாதத்தினை ஒழிப்பதற்குத் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

நேற்று(11) இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனைகளை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.