முஹம்மத் சாத் ஹத்தாக் – ரிஷாத் இடையே சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் முஹம்மத் சாத் ஹத்தாக் அவர்களின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அவரை சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார்.

சிறுபான்மை சமூகம் மற்றும் சமூக கலாச்சார விடயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.