(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று(02) காலை மாலைதீவை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அந்நாடு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வேலானா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அரச மரியாதைகளுடன் வரவேற்றுள்ளார்.
எதிர்வரும் 03 ஆம், 04 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


